இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவது பனிப்பாறை ஏரிகளின் அளவை ஆபத்தான முறையில் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவை கண்காணிக்கப்படாத பிற ஆபத்துகளையும் ஏற்படுத்துகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இரு துருவங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இமயமலைப்பகுதியில்தான் உலகிலேயே மிக அதிகமான பனிப்பாறைகள் இருக்கின்றன. புவி வெப்பமடைதலால் மில்லியன் கணக்கான டன் பனி இங்கு உருகியுள்ளது. இதுபோன்ற ஆபத்துகள் குறித்து நாம் எவ்வளவு தூரம் அறியாமையில் இருக்கிறோம் என்பதற்கு உத்தராகண்ட் மாநிலத்தின் சாமோலியில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவு மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டு என்று நிபுணர்கள் நம்புகின்றனர். "இத்தகைய ஆபத்துகளின் பின்னணியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது பற்றி விரிவான புரிதல் நம்மிடம் இல்லை" என்று அமெரிக்காவின் மூத்த புவியியலாளரும் இமயமலை பேரழிவுகள் பற்றிய ஆராய்ச்சியாளரும், உத்தராகண்ட் பேரழிவு குறித்து ஆராய்ச்சி செய்துவருபவருமான ஜெஃப்ரி கார்ஜெல் கூறுகிறார். உத்தராகண்ட் நிகழ்வுகள் போன்றவை நடக்கும்போது நாம் செயலில் இறங்குகிறோம். ஆனால் பனிப்பாறைகள் உருகுவதன் மூலமாக ஏ
மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு, சிவத்தபோக்கடி கிராமத்தில் வீடொன்றிலிருந்து குடும்ப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 6 வயது மற்றும் 15 மாத கைக்குழந்தையின் தாயான குணரெத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் கடன் பெற்று, மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கணவன் மது போதையில் தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிபத்திரம், மோட்டார்சைக்கிளின் காப்புறுதி பத்திரம் என்பன இன்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் போக்குவரத்து பொலிஸாரிடம் வசமாக சிக்கி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 30 ஆயிரத்தை தண்டப்பணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான பணம் மற்றுமொரு இடத்தில் வட்டிக்குப் பெறப்பட்டுள்ளது. இந்த பணம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ப