முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யாழ்ப்பாணத்தில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் !

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்த மர்ம கும்பம் ஒன்று சரமாரியானதாக்குதல் மேற்கொண்டதால் அந்தப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டது.
தென்மராட்சி, மாசேரி பகுதியில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஒன்று, நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
மண் அள்ளப் பயன்படுத்தப்படும் சவள், கொட்டன் தடிகள், இரும்புக் கேடர்களுடன் தாக்குதல் குழு வீட்டினுள் நுழைந்து அட்டகாசம் செய்துள்ளது.
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் மீது தீ வைத்ததுடன் வீட்டிற்கு மேல் ஏறி வீட்டின் கூரைகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.
தனியார் போக்குவரவு பேருந்து ஒன்றின் உரிமையாளர் ஒருவரின் வீட்டின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதி மக்கள் ஒன்றுகூடியமையினால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
மக்கள் ஒன்றுகூடியமையினால் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்