முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்!

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு, சிவத்தபோக்கடி கிராமத்தில் வீடொன்றிலிருந்து குடும்ப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 6 வயது மற்றும் 15 மாத கைக்குழந்தையின் தாயான குணரெத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் கடன் பெற்று, மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கணவன் மது போதையில் தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிபத்திரம், மோட்டார்சைக்கிளின் காப்புறுதி பத்திரம் என்பன இன்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் போக்குவரத்து பொலிஸாரிடம் வசமாக சிக்கி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 30 ஆயிரத்தை தண்டப்பணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான பணம் மற்றுமொரு இடத்தில் வட்டிக்குப் பெறப்பட்டுள்ளது. இந்த பணம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த ப