முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீ ஞானவைரவர் சிறுப்பிட்டி மேற்கு


குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய
பல்வகைப்பயிர்களும் செழித்துவளரும் பொன் விளையும் பூமி எனக் கூறலாம். இங்கு சைவமும், தமிழும் ஒருங்கே வளர்ந்து மேலும் இக்கிராமத்தை மேலும் அழகுறச்செய்கிறது. இக்கிராமத்திலேதான் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் உதித்து சைவத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்றினார். சிறுப்பிட்டி கிராமம் ஒரு பெரிய கிராமமாகையால் இதனை ஐந்து பகுதிகளாக {வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தி} என பிரித்திருந்தனர். இதில் சிறுப்பிட்டி மேற்கு பகுதியை அழகுறச்செய்யும் வகையில் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம் அமைந்துள்ளது.

சில நூற்றாண்டுக்கு முன்பாக அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்ட மக்கள் தங்கள் சமயத்தை வளர்க்கும் பொருட்டு ஒரு பனந்தோப்பு மத்தியில் இருந்த வேப்பமர நிழலில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்த அடிப்படையில் உருவாக்கப்படதே ஸ்ரீ ஞானவைரவர் ஆலயமாகும்.
சூலத்தை வைத்து வழிபட்டுவரும் காலத்தில் வாழ்ந்த அடியவர்களின் வழித்தோன்றலில் ஒருவரான இளையதம்பி வேலுப்பிள்ளை என்பவர் அடியார்களின் ஒத்துளைப்புடன் இவ்ஆலயத்துக்கென ஒரு சுண்ணாம்புக்கல்லிலாலான கட்டிடத்தை கட்டி அதில் ஞானவைரவர் விக்கிரகத்தை ஸ்தாபித்து பூசைகளை மேற்கொண்டு வழிபட்டுவரலாயினர். இப்படி வரும் காலத்தில் ஆலயத்தில் எற்பட்ட சிற்சில பிரச்சினைகளால் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆலயம் பூசைகள் எதுவும் இன்றி தேடுவாரற்ற நிலயில் சில ஆண்டுகளாக இருந்தமையால் கறையான் புற்று மூடி ஆலயம் சீரழிந்துவிட்டது.

இக்காலத்தில் ஆலயம் அனாதரவான நிலையில் இருப்பதை மக்களுக்கு உணர்த்தி அவர்களின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு எம்பெருமான் திருவுளம் கொண்டு தினமும் பகல் 12 மணிக்கு மணியடித்து பூசை நடப்பது போன்ற ஒலியும், மாலை 6 மணிக்கு பிற்பாடு ஓர் கறுத்த நாயுடன் ஒருவர் ஆலயச்சூழலில் வலம் வருவதும் நாளாந்த அற்புத நிகழ்ச்சியாகிவிட்டது. இதனால் மக்கள் ஆலயச்சூழலுக்கு ஓர் அச்ச உணர்வுடனேயே செல்வதும், மாலை ஆனவுடன் வீட்டைவிட்டு வெளியில் வருவதும் இல்லை. இப்படியே சில ஆண்டுகள் கழிந்தன.
இவ்வாறிருக்கும் காலத்தில் இக் கிராமத்தில் பிறந்திருந்த கார்த்திகேசு செல்லப்பு என்பவர் தனது இளம் வயதில் மலேசியாவில் காட்டு இலாகாவில் பணிபுரிந்து வரும் காலத்தில் தவறுதலாக ஏற்பட்ட விபத்தின் கரணமாக வலதுபக்க இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட ஊனத்தினால் தான் பிறந்த மண்ணுக்கு வரவேண்டும் என்ற ஆவலில் சிறுப்பிட்டி மேற்கு கிராமத்துக்கு வந்து ஆலய சூழலில் வாழ்ந்து வந்த தனது சகோதரி குஞ்சுப்பிள்ளையுடன் வசித்து வந்தார். இவ்வாறு வசித்துவரும்போது எம்பெருமான் நிகழ்த்தும் அற்புத நிகழ்வையும் இவர் காணத்தவறவில்லை. அதனை தனது சகோதரியிடம் கேட்டு விபரத்தை அறிந்து இவ்வாலயத்தை அமைக்க திடசங்கற்பம் கொண்டார்.
அதன் பிரகாரம் இவ்வாலயத்தை முன்பு நிர்வகித்து வந்த இளையதம்பி வேலுப்பிள்ளையுடன் கதைத்து தானும் முன்னின்று இருவருமாக அக்காலத்தில் வாழ்ந்திருந்த இளைஞர்களின் உதவியோடு ஒவ்வொரு வீடாக்கச்சென்று பணம் சேகரித்து ஆலயம் அமைக்கத் தொடங்கினார்கள். அப்போது ஆலயம் ஒரு கட்டுக்கோப்பாக இருக்கவேண்டும் என்ற திட்டம் அவர்களுக்குத் தோன்றவே சொத்தியப்ப என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் கார்த்திகேசு செல்லப்பு அவர்களின் தலைமையின் கீழ் இளையதம்பி வேலுப்பிள்ளை, வல்லிபுரம் சின்னையா, கந்தர் வல்லிபுரம், வேலுப்பிள்ளை கனகசபை, சண்முகம் இளையதம்பி, குட்டியர் இராசா, குட்டியர் சின்னத்துரை, கார்த்திகேசு தம்பிப்பிள்ளை, வல்லிபுரம் தம்பிமுத்து, ஆகியோர் கொண்ட ஒரு பரிபாலனசபையும் அமைக்கப்பட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்