முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடியுரிமை நடைமுறையை கடினமாக்கியுள்ள சுவிஸ் மாநிலம்

சுவிட்சர்லாந்திலுள்ள Aargau மாகாண குடிமக்கள், வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதை கடினமாக்குவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள்.

நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றில், 64.8% பேர், மாகாண நாடாளுமன்றம் வெளிநாட்டு மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக எடுத்த முடிவை ஆதரித்து வாக்களித்துள்ளார்கள்.
வலதுசாரியினர் அந்த சட்டத்திருத்தத்தை ஆதரிக்க, எதிர்த்து வாக்களித்த இடது சாரியினர் மற்றும் நடுநிலைவாதிகள் வாக்கெடுப்பில் தோற்றுப்போனார்கள்.
அந்த சட்டத்தின்படி, கடந்த பத்தண்டுகளாக அரசு உதவித்தொகை பெறாதவர்கள் மட்டுமே குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும்.
அத்துடன் அவர்கள் சுவிஸ் பாஸ்போர்ட் பெறவேண்டுமானால், தேர்வு ஒன்றிலும் வெற்றி பெறவேண்டும்.
நாட்டின் அரசியல், சமூகம், வரலாறு மற்றும் புவியியல் குறித்த கேள்விகள் அத்தேர்வில் இடம்பெறும்.
இது பாரபட்சமான செயல் என இடதுசாரியினர் இந்த சட்டத்திருத்தத்தை விமர்சித்திருந்தனர்.
ஆனால், அரசு உதவிகள் தேவையற்ற வகையில் கொடுக்கப்படுவதை தடுக்க கட்டுப்பாடுகள் தேவைதான் என வலதுசாரியினர் வாதிடுகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்