கடந்த இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையான ஆறு மணி நேரத்தில்
ஊரடங்கு உத்தரவை மீறிய 206 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களது 56 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 20 ஆம் திகதி முதல் இன்று வரை ஊரடங்கு உத்தரவை மீறிய 6,247 பேரை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 1,533 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.