ஊரடங்கு சட்டத்தின் போது அனுமதிக்கப்பட்ட உரிய ஆவணங்கள் இன்றி பயணிக்கும் சகலரும் பிடியாணை உத்தரவின்றி கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்
.
பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீது குற்றச்செயல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும் என அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, நீதிமன்றில் குற்றமிழைத்தவர் என நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை அல்லது அபராதம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஊரடங்கு சட்டத்தின் போது பொலிஸாரால் பொறுப்பேற்கப்படும் வாகனங்கள் கொரோனா வைரஸ் குறைவடையும் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது..
.
பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீது குற்றச்செயல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும் என அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, நீதிமன்றில் குற்றமிழைத்தவர் என நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை அல்லது அபராதம் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ஊரடங்கு சட்டத்தின் போது பொலிஸாரால் பொறுப்பேற்கப்படும் வாகனங்கள் கொரோனா வைரஸ் குறைவடையும் வரை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது..