முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுவிட்சர்லாந்தில் வாடகை செலுத்த இயலாமல் தவிப்போருக்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கை

கொரோனா அச்சம் காரணமாக சுவிட்சர்லாந்தில் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் தவிப்பதையடுத்து, வீட்டு வாடகை செலுத்துதல் பல குடும்பங்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது.
ஆனால், அரசு அவர்களுடைய அச்சத்தை குறைக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசின் பொருளாதார விவகாரங்கள் செயலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் 750,000 பேர் முழுமையான வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
இது நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 15 சதவிகிதமாகும்.
டிசினோ மாகாணத்தைப் பொருத்தவரை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம், அங்குள்ளோரில் 39 சதவிகிதத்தினர் பகுதி நேர பணியாற்றுவோர்.
ஆகவே, அவர்களில் பெரும்பாலானோர் நேரத்திற்கு தங்கள் வீட்டு வாடகையை செலுத்த இயலாமல் தவிப்பதால் பெடரல் கவுன்சில், வீட்டு வாடகை செலுத்தும் திகதியை 30 முதல் 90 நாட்களுக்கு தள்ளிவைத்துள்ளது.
அதாவது, வாடகை செலுத்த வேண்டியவர்கள், வாடகை செலுத்த அதிகபட்சமாக 90 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.
என்றாலும், இதுவும் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஒரு வகையில் சுமைதான், காரணம் மூன்று மாத வாடகையை அவர்கள் சேர்த்து செலுத்துவதும் பெரும் பிரச்சினைதான் என வாடகை வீடுகளில் வசிப்போர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்