கொரோனா பாதிப்பை தடுக்கும் காய்கறி, பழங்கள், உணவுப்பொருட்கள் என்னவென்று அறிந்து
கொள்ளலாம்.
வைட்டமின் சி அதிகம் காணப்படும் நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் 2 தக்காளி பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
மஞ்சள் இயற்கையாகவே சிறந்த கிருமிநாசினி ஆகும். மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் நமது உடலில் தங்கியுள்ள நச்சுகள், குடற் பூச்சிகள் போன்றவை அழிகின்றன.
2 கிராம் சுத்தமான பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். இஞ்சி மற்றும் பூண்டுவை அரைத்து, சட்னி அல்லது குழம்பு வைத்து உணவில் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.
சுவாசகோளாறை சரிசெய்வதில் துளசி முக்கிய பங்காற்றுகிறது. எனவே, துளசி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம். இஞ்சியுடன் துளசியை சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அன்னாசி பூ ரத்தத்தில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமை உள்ளது. எனவே, இந்த பூவை பொடியாக்கி தேநீருடன் கலந்து தினமும் 100 மில்லி அளவுக்கு குடித்துவருவது நல்லது.