கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்து முழுவதும் குறிப்பிட்ட
காலத்திற்கு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த விஞ்ஞானி ஒருவர் பொதுமக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் மிகவும் வெறுக்கப்படும் விஞ்ஞானியாக தாம் தற்போது மாறியுள்ளதாக சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த அட்ரியானோ அகுஸி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.