முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வடக்கில் தனிமைபடுத்தல் முகாமாக 50 பாடசாலைகள்

கொரோனா சந்தேகத்தின் அடிப்படையில் சிறிலங்கா முப்படையினர் மற்றும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்காக வடமாகாணத்தில் 50 ற்கும் மேற்பட்ட பாடசாலைகளை இராணுவம் கேட்டிருப்பதாக மாகாண கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடமாகாண கல்வி அமைச்ணின் கீழ் உள்ள படைமுகாம்களில் இருந்து விடுமுறையில் சென்ற படையினரை தங்க வைப்பதற்காகவெனத் தெரிவித்தே குறித்த பாடசாலைகள் இவ்வாறு படையினரால் கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு படையினரால் கோரப்பட்ட பாடசாலைகள் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 06 பாடசாலைகளும் , மன்னார் கல்வி வலயத்தில் 04 பாடசாலைகளும் , வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் 03 பாடசாலைகளும் , கிளிநொச்சி 03 , மடு 01 , வவுனியா வடக்கு 02 , சாவகச்சேரி 03 பாடசாலைகளும் கோரப்பட்டுள்ளது.இதேபோன்று வடமராட்சியில் 10 பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதோடு தீவகம், வலிகாமம் கல்வி வலயங்களிலும் பாடசாலைகள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
மக்கள் செறிந்து வாழும் கோப்பாய் கல்வியற் கல்லூரியை இராணுவத்தினரை தனிமைப்படுத்துவதற்கான நிலையமாக தெரிவு செய்ததுடன் அதற்காண பணிகளில் இராணுவம் ஈடுபட்ட நிலையில் மக்களின் பலமான எதிர்ப்பபையடுத்து இராவம் அங்கிருந்து வெளியேறியிருப்பதம் குறிப்பிடத்தக்கது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்