சுவிட்சர்லாந்து முடக்கப்பட்டுள்ளதால், சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்ற சுமார் 56,000 பேர்
எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மார்ச் மாதம் 25ஆம் திகதி சுவிட்சர்லாந்து தன் எல்லைகளை மூடியது.
சுவிஸ் குடிமக்கள், வாழிட உரிமம் பெற்றோர் மற்றும் எலை தாண்டி பணிக்குச் செல்வோர் மட்டுமே எல்லை கடக்க அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் எல்லை கடக்கும் பகுதிகளும் பெரிய அளவில் குறைக்கப்பட்டன.
இந்நிலையில், கட்டுப்பாடுகளை மீறி எல்லை கடந்த 150 பேருக்கு, 100 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில், எல்லை கடந்து மக்கள் பயணித்தே கொரோனா பெருமளவில் பரவுவதற்கு காரணமாக அமைந்ததாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.