சுவிட்சர்லாந்தில் ரத்த மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் ஜெனீவா மண்டலத்தின் 5 சதவீத மக்கள் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அதாவது ஜெனீவாவில் 20 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை புதிய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
தற்போது கண்டறியப்பட்ட எண்ணிக்கையானது இதுவரை அறிவிக்கப்பட்ட பட்டியல்களில் வெளியிடப்படாதது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவிஸ் நிர்வாகம் புதன் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 28 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு இலக்கானதாக அறிவித்துள்ளனர்.
தற்போது முன்னெடுக்கப்படும் புதிய முறையின் நன்மை என்னவென்றால், குறிப்பிட்ட நபர் பல வாரங்களாக கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்பட்டாலும் ரத்த மாதிரி சோதனையில் உறுதி செய்யப்படுகிறது.