முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூட்டமான இடங்களில் கொரோனா வைரஸ் இருந்தால் எச்சரிக்கும் கருவி

ரயில் நிலையம், மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ் இருந்தால், அதைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை சுவிஸ் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
காற்றில் பரவும் வைரஸ்களை ‘பார்க்கவும், உணரவும்’ கூடிய திறன் கொண்ட சென்சார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ள அறிவியலாளர்கள், அது கொரோனா பரவலைத் தடுக்க உதவலாம் என்று நம்புகிறார்கள்.
 
கூட்டமான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அந்த உயிரி சென்சார் (biosensor), ஏற்கனவே அதற்கு கொடுக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் மாதிரியுடன் ஒப்பிட்டு, மக்களில் யாருக்காவது அந்த வைரஸ் உள்ளதா என்பதைக் கண்டறிகிறது.
அத்துடன், வைரஸின் வெப்பநிலையையும் ஆராயும் அந்த சென்சார், அதே வெப்ப நிலைகொண்ட வைரஸ் தன்னருகே வரும்போதும் எச்சரிக்கிறது.
இந்த கருவியை Swiss Federal Laboratories for Materials Science and Technology (Empa), Zurich’s Federal Institute of Technology (ETHZ)யுடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த சென்சாரை ரயில் நிலையம், மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொருத்தினால், அங்கு அதிக அளவிலான கொரோனா வைரஸ் காணப்படும்போது, அதாவது கொரோனா தொற்றுடையவர்கள் அப்பகுதிக்கு வரும்போது, அது எச்சரிக்கும்.
 
உடனே அதிகாரிகள் அந்த பகுதியிலிருந்து மக்களை அப்புறப்படுத்துவதன் மூலம் தொற்று பரவலைக் கட்டுக்குள் வைக்கலாம்.
இது கொரோனாவைக் கண்டறியும் மையக் கருவியாக பயன்படுத்தப்படாமல், ஏற்கனவே இருக்கும் பரிசோதனை முறைகளுடன் கூடுதல் உதவியாகத்தான் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கருவியில் இன்னும் பல விடயங்களை மேம்படுத்தவேண்டியுள்ளதால், அது இன்னமும் பொது பயன்பாட்டுக்கு வரவில்லை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்