சுன்னாகம் மத்திய சந்தை ஊரடங்கு தளர்வின் பின்னரும் கொரோனாத் தாக்கத்தின் எதிரொலியாக சந்தை
வளாகத்தில் இயங்க அனுமதிக்கப்படவில்லை.
இதனால், ஊரடங்கு தளர்வின் பின்னர் சுன்னாகம் சந்தை வியாபாரிகள் பெரும் அசெளரியங்கள், சிரமங்களுக்கு மத்தியில் சுன்னாகம் மீன் சந்தைக்கு அருகில் வீதியிலும், சந்தைக் கட்டடத் தொகுதிக்கு முன்பாகவும், சுன்னாகம் பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாகவும் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் திடீரெனப் பெய்த கடும் மழையால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்.
வியாபாரிகளின் இந்த அவலமான காட்சிகளைப் பார்த்த பின்னராவது வலி.தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட சபை நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கைகள் எடுப்பார்களா?
கொரோனாத் தாக்கத்தைக் கருத்திற் கொண்டு வலி.தெற்குப் பிரதேச சபை சந்தை வளாகத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட அனுமதி மறுத்துள்ள போதிலும் எமது வியாபார நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான மாற்று ஏற்பாடு மேற்கொள்ளாமை ஏன் என சந்தை வியாபாரிகள் கடும் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.