வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்பிக்கும் நடைமுறை திட்டம்
கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வருகின்ற கல்வி பொது உயர்தர பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்கு கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் இணையத்தை பயன்படுத்தி ஒன்லைன் சூம் (ZOOM) என்ற ஆப்ஸின் ஊடாக வீட்டில் இருக்கும் உயர்தர பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்கு கல்வி கற்கக்கூடியவாரு ஆசிரியர்கள் வீட்டிலிருந்தவாறே கற்பிக்கக் கூடியவாறு கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களிடம் இருக்கும் இணையத்தளம் பாவிக்கக்கூடிய போன், ஐபாட் மற்றும் கணணி போன்றவற்றை பயன்படுத்தி ஒன்லைன் சூம் (ZOOM) என்ற ஆப்ஸின் ஊடாக வீட்டில் இருந்தவாறே மாணவர்கள் கல்வி கற்க கூடியவாறும் ஆசிரியர்கள் வீட்டில் இருந்தவாறே கல்வி கற்பிக்க கூடியவாறும் மேற்கொள்ள முடியுமென கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் காமராஜ் தெரிவித்துள்ளார்