கொழும்பில் கொரோனா அபாய வலயத்திலிருந்து லொறியில் மறைந்து யாழ்ப்பாணத்துக்குள்
நுழைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஏனத் தெரியவந்துள்ளது. அவர்களை லொறிக்குள் மறைத்து ஏற்றி வந்த சாரதி அடையாளம் காணப்பட்டு இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்
அவர் பணத்துக்காக அவர்களை ஏற்றி வந்துள்ளார். சாரதியும், திருட்டுத்தனமாக யாழ்ப்பாணத்துக்குள் நுழைந்தவர்களும் அடையாளம் காணப்பட்டு பலாலியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சாரதி புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்வர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. டாம் வீதியில் சிக்கியிருந்தவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களை ஏற்றி வந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்திருக்கின்றது. குருநகர் கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒருவர், யாழ் ஐந்துச் சந்தியைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர், சங்கானை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர், தெல்லிப்பழைச் சந்திக்கு அண்மையிலுள்ள ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த மூவருடன், லொறியின் சாரதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.