முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்!

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கரடியனாறு, சிவத்தபோக்கடி கிராமத்தில் வீடொன்றிலிருந்து குடும்ப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 6 வயது மற்றும் 15 மாத கைக்குழந்தையின் தாயான குணரெத்தினம் சிந்துஜா (வயது 26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் நுண்கடன் வழங்கும் இரு நிறுவனங்களிடமிருந்து இரண்டு இலட்ச ரூபாய் கடன் பெற்று, மேசன் வேலை செய்யும் தனது கணவன் தொழிலுக்குச் சென்று வருவதற்காக மோட்டார் சைக்கிளொன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் கணவன் மது போதையில் தலைக்கவசம் மற்றும் சாரதி அனுமதிபத்திரம், மோட்டார்சைக்கிளின் காப்புறுதி பத்திரம் என்பன இன்றி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் போக்குவரத்து பொலிஸாரிடம் வசமாக சிக்கி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரூபாய் 30 ஆயிரத்தை தண்டப்பணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான பணம் மற்றுமொரு இடத்தில் வட்டிக்குப் பெறப்பட்டுள்ளது. இந்த பணம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தினால் கட்டப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கணவன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மனைவியை விட்டுப் பிரிந்து சென்றதால் உயிரிழந்த பெண் தனது பிள்ளைகளுடன் சகோதரியின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சம்பவங்களை தொடர்ந்தே அந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் முக்கிய வீதிகளில் அலங்கார வளைவு.

வரலாற்று சிறப்புமிக்க நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிப்பலன் 11. 03. 2020

மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்